பெரிய நடிகர்கள் செய்தால் அர்ப்பணிப்பு. அதுவே அறிமுகமாகிறவர்கள் செய்தால் ஆர்வக் கோளாறு. திரையுலகில் எல்லா விஷயத்திற்கும் இதே அளவுகோல்தான். இதோ இரண்டு `அர்ப்பணிப்புகள்` நம் கண்ணெதிரே. மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடல் தவிர மற்ற எல்லா பாடல்களையும் கமலே எழுதிவிட்டார். டைரக்டர்களில் பேரரசு உள்ளிட்ட பலரும் தங்கள் படங்களுக்கு தாங்களே பாடல்களை எழுதிவிடுகிறார்கள். பாடலாசிரியர்கள் சங்கம் பரவால்லன்னு விடுறதாலதான் இப்படியெல்லாம் நடக்குதோ என்னவோ? போகட்டும்... கமல்ஹாசனை தொடர்ந்து இப்போது சிம்புவும் பாடல் எழுத வந்துவிட்டார்.
இவரும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்துவிட்டால் மெட்டு ஹிட்டாகும். ஹிட் துட்டாகும் என்பது ஊர் உலகமே அறிந்த நல்ல விஷயம்தான்.
இவரது இசையில் பல பாடல்களை பாடியிருக்கும் சிம்பு இப்போது ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். அதன் பல்லவியை கேட்டால் அப்படியே ஆடிப் போயிருவீங்க!
எவன்டி உன்னை பெத்தான், பெத்தாள்...
கையில கிடைச்சா செத்தான், செத்தாள்...
இப்படி போவுது பாட்டு.
படம் வந்தா ஊரே ஒண்ணு கூடி உரல் இடிக்கும்...
0 comments:
Post a Comment