கோவாவில் அடுத்த மாதம் 22 தேதி முதல் டிசம்பர் 2ம்தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக என்.சந்திரா தலைமையிலான 10 உறுப்பிர்கள் கொண்ட நடுவர் குழுவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படங்களை பார்த்த நடுவர் குழுவினர், அதில் 26 இந்திய மொழி திரைப்படங்களை தேர்வு செய்து உள்ளனர். இதில் டைரக்டர் மணிரத்தினம் இயக்கிய ராவணன், டைரக்டர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, டைரக்டர் பிரேம்லால் இயக்கிய ஆத்ம கதா ஆகிய 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. இந்த மூன்று படங்களும் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் மணிரத்னம், வசந்தபாலன், பிரேம்லால் மற்றும் அந்த படங்களைச் சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
Tuesday, October 19, 2010
கோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் 3 தமிழ் படங்கள்
Author: manikandan
| Posted at: 11:36 PM |
Filed Under:
Kollywood News
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment