Tuesday, October 19, 2010

நயன்தாரா - பிரபுதேவா கோர்ட்டுக்கு வரவில்‌லை!

கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி நடிகர் பிரபுதேவாவின் மனைவி ரமலத் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவும், பிரபுதேவாவும் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. கள்ளக்காதலர்களாக சுற்றித் திரியும் நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்யப் போவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து பிரபுதேவாவின் காதல் மனைவி ரம்லத், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. என்னையும், குழந்தைகளையும் பிரபுதேவா பார்க்க வருவதில்லை, குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை. எனவே பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரமலத் தாக்கல் செய்த இன்னொரு மனுவில், “பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, நான் தொடர்ந்த வழக்கு முடியும் வரை பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணம் செய்ய தடை விதிக்க வேண்டும். இருவரும் இணைந்து கணவன், மனைவிபோல் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதற்கும், மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.மனுவை விசாரித்த கோர்ட், அக்டோபர் 19ம்‌தேதி பிரபுதேவாவும், நயன்தாராவும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் ஏற்கனவே இருவருக்கும் சம்மன் அனுப்பிவிட்டநிலையில், பிரபுதேவாவும், நயன்தாராவும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. பிரபுதேவாவின் மனைவி ரமலத் மட்டும் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் 23ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails