மும்பை மக்களின் மனம் கவந்த பாலிவுட் நடிகரான மாதவன், ஆதரவற்ற பிராணிகளிடம் மிகவும் இரக்கம் உடையவர். ரங் தே பசந்தி, குரு, 3 இடியட்ஸ் உள்ளிட்ட ஹிட்டான படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் மாதவன், பெட்டா இந்தியா சார்பாக கே.எஃப்.சி.,யின் பேரன்ட் நிறுவனமான யம் பிராண்ட்சின் சி.ஈ.ஓ., ஆன டேவிட் நொவாக்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கே.எஃப்.சி.,க்காக கொல்லப்படும் கோழிகளை மிக மோசமாக கையாள்வதை நிறுத்துவதில் பெட்டாவின் பரிந்துரைகளை பின்பற்றுபடி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"நாய்களோ,பூஜைகளோ அல்லது கோழிகளோ - எந்த பிராணிகள் ஆனாலும் சரி, அவை மோசமாக நடத்தப்படக் கூடாது மற்றும் அவற்றின் மீதான குரூர நடவடிக்கைகள் நிறுப்படுவது மிக முக்கியம் என்பதை இரக்கம் மிக்க நபரான நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன்" என மாதவன் நொவாக்கிற்கு எழுதிய கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். "பெட்டா மற்றும் கே.எஃசி.சி.,யின் சொந்த முன்னாள் பிராணிகள் நல ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்படும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த துன்பப்படும் பிராணிகள் தவறாக கையாளப்படுவதை நிறுத்திட உங்கள் சிறப்பான பதவி நிலையை தயவு செய்து பயன்படுத்துங்கள்" என்றும் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் இருந்து முதன்மையாக கே.எஃப்.சி., க்கு சப்ளை செய்யும் வெங்கி பற்றி பெட்டா மேற்கொண்ட ஆய்வு விசாரணையில் கிடைத்த தகவல்களை மாதவன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, October 19, 2010
கோழிகளை பாதுகாக்க பரிந்துரை செய்கிறார் மாதவன்
Author: manikandan
| Posted at: 11:59 PM |
Filed Under:
Bollywood News,
Kollywood News
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment