பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி 4ம் அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதை அமிதாப் பச்சனின் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். சோனி டி.வி.,யில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெறும் குவிஸ் மாஸ்டராக மட்டும் இல்லாமல், போட்டியாளர்களின் குடும்பப் பின்னணி, பொது அறிவை வளர்க்க அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்துகிறார் அமிதாப்.
கோன் பனேகா குரோர்பதியின் முதல் இரு பாகங்களை அமிதாப் நடத்தினார். 3வது பாகத்தை ஷாருக் கான் நடத்தினார். ஆனால் அமிதாப் பச்சன் அளவுக்கு ஷாருக்கானின் குரோர்பதி நிகழ்ச்சி இல்லை என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் தற்போது 4வது அத்தியாயத்திற்கு மீண்டும் வந்துள்ளார் அமிதாப் பச்சன். மீண்டும் அமிதாப் பசச்சின் கை பட்டு மிளிரத் தொடங்கியுள்ள கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி புதிய உயரத்தை எட்டும் என்று நிழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tuesday, October 19, 2010
கோன்பனேகா குரோர்பதி 4ம் அத்தியாயம்
Author: manikandan
| Posted at: 11:57 PM |
Filed Under:
Bollywood News
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment