Saturday, September 25, 2010
மீண்டும் இந்தி படம் எடுக்கிறார் முருகதாஸ்
Author: manikandan
| Posted at: 9:28 AM |
Filed Under:
Bollywood News,
Kollywood News
|

கஜினி பட வெற்றிக்கு பிறகு சுமார் 2 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திப் படம் எடுக்கும் வேலையில் இறங்கி உள்ளார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இது இவர் இயக்கும் இரண்டாவது இந்திப் படம் ஆகும். இந்த படத்தில் அக்ஷை குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருடன் விபுல் ஷாவும் நடிக்க உள்ளார். விபுல் ஷா, தற்போது ஜான் ஆப்ரகாமை வைத்து ஒரு படம் தயாரித்து கொண்டிருக்கிறார். இது காக்க காக்க படத்தின் இந்தி பதிப்பாகும். தற்போது முருகதாஸ் இயக்க உள்ள இந்திப் படத்தையும் விபுல் ஷா தான் தயாரிக்க உள்ளார். ஸ்ருதிஹாசனை வைத்து முருகதாஸ் தற்போது இயக்கி வரும் தமிழ்ப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், தனது இந்தி பட வேலைகளில் இறங்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment