அக்ஷய்குமார் நடிக்கும் இந்திப் படத்தை பிரபுதேவா இயக்குகிறார். சல்மான்கான் நடித்த 'வான்டட்' படத்தை இந்தியில் இயக்கியிருந்தார் பிரபுதேவா. இது 'போக்கிரி' படத்தின் ரீமேக்.
இதையடுத்து இப்போது மீண்டும் இந்தி படம் இயக்குகிறார். இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். இதுபற்றி பிரபுதேவா கூறும்போது, 'சஞ்சாய் லீலா பன்சாலியின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன்.
அவரது ரசிகன் நான். அவர் படம் இயக்க வேண்டும் என்று கேட்டார். அதை கேட்டதுமே மகிழ்ச்சியாக இருந்தது. சரி என்று சொல்லிவிட்டேன். மற்ற விஷயங்கள் பற்றி இன்னும் பேச வில்லை' என்றார். இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.
Friday, September 24, 2010
பிரவுதேவாவிடம் அக்ஷய்குமாரின் படம்
Author: manikandan
| Posted at: 1:51 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment