சென்னை ஏர்போர்ட்டில் நமீதாவுக்கு முன்னுரிமை கொடுத்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.
பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை சைகை மூலம் அருகில் அழைத்து, ‘நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’ என்று கேட்டார். உடனே அந்த பாதுகாப்பு வீரர், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்துக்கு நடிகை நமீதாவை அழைத்து சென்றார். பெண் அதிகாரிகள், நமிதாவை சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பினர். இதை பார்த்த மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். “நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது?’’ என்று வாக்குவாதம் செய்தனர்.
உடனே “இந்த பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம். இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று பாதுகாப்பு வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Sunday, September 26, 2010
ஏர்போர்ட்டில் நமீதாவுக்கு முன்னுரிமை கொடுத்ததால் பரபரப்பு
Author: manikandan
| Posted at: 2:10 AM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment