Thursday, September 23, 2010

உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய விஜய்

காவலன் படம் என் வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும் என்று விஜய் கூறியது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்தில் அப்படி என்ன வித்தியாசம்?

இதுபற்றி காவலன் படத்தின் இயக்குநர் சித்திக் கூறுகையில், "இந்தப் படத்தின் கதை மிக வலுவானது. ஊரில் உள்ள பெரிய தாதாவான ராஜ்கிரண் மனம் திருந்தி அமைதியா வாழ விரும்புகிறார். அப்போது தன் மகள் அசினுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக விஜய்யை காவலனாக நியமிக்கிறான். இந்த காவலன் பின்னர் காதலனாகிறார்... தாதாவின் சம்மதத்துடன் கணவனாகிறாரா என்பதுதான் கதை.

படத்துக்காக விஜய் மிகவும் சிரத்தையெடுத்து வித்தியாசமான நடிப்பைத் தந்துள்ளார். இதில் அவர் கேரக்டர் பெயர் பூமி நாதன். இந்த பூமி மாதிரி எல்லாரையும் அவர் தாங்குவார் என்று அர்த்தம் கொள்ளலாம்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் விஜய்க்கு வித்தியாசமான கெட்டப்பைத் தந்துள்ளோம்.

ஒரு பாடலில் முழுக்க வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் (செம்பட்டை கலர் முடி!) வருகிறார்..' என்றார்.

சித்திக் சீரியஸாக சொல்கிறாரா.. கலாய்க்கிறாரா?' விஜய் ரசிகர்கள்தான் சொல்லணும்!

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails