அரசியல் தலைவர்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியின் மகன்கள், பேரன்கள் என பலரும் சினிமாவில் நடிப்பு, இயக்கம், இசையமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்து சினிமாத்துறையில் கால்பதித்துள்ளனர். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் அரசியல் வாரிசு ஒருவர் சினிமாவில் நடிக்கப் போகிறார். அந்த அரசியல் தலைவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி. இவரது இளைய மகன் அஜித்பால் சினிமாவில் தீவிர ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது தனது சொந்த திரைக் கதையில் மலையாள சினிமா ஒன்றில் கதாநாயகனாக நடிக்கப் போகிறாராம். அந்த படத்திற்கு ஓபராய் என பெயரிடப்பட்டுள்ளது.
இதுபற்றி அஜித்பால் கூறுகையில், "எனக்கு வெகுநாட்களாகவே, சினிமா மீது மிகவும் ஆசை. இதற்காக, சினிமா படிப்பு எதிலும் சேர்ந்து நான் படிக்கவில்லை. இந்த திரைப்படம் முதலில் மலையாள மொழியில் தயாரிக்கப்படுகிறது. பின்னர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவருகிறது. கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த சினிமாவின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார். மலையாள டைரக்டர் இயக்குநர் அஜி ஜான் இந்த படத்தை இயக்குகிறார்.
இதுபற்றி அஜித்பால் கூறுகையில், "எனக்கு வெகுநாட்களாகவே, சினிமா மீது மிகவும் ஆசை. இதற்காக, சினிமா படிப்பு எதிலும் சேர்ந்து நான் படிக்கவில்லை. இந்த திரைப்படம் முதலில் மலையாள மொழியில் தயாரிக்கப்படுகிறது. பின்னர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவருகிறது. கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த சினிமாவின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார். மலையாள டைரக்டர் இயக்குநர் அஜி ஜான் இந்த படத்தை இயக்குகிறார்.
0 comments:
Post a Comment